ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மனப்பாங்கு மற்றும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஒன்று 2025.09.23 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அனுராதபுரம் மாவட்ட உற்பத்தித் திறன் இணைப்பாளர் திரு. சிசிர திசாநாயக்க அவர்களால் இந்நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.
திறமையான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருக்குத் தேவையான மனப்பாங்கு மற்றும் ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்குடன், ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் திருமதி உதேஷிகா கே. ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் பேரில், உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) செல்வி சானுக்கா லியனகே அவர்களின் மேற்பார்வையின் கீழ், ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவினால் இந்நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.















