ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பிரதேச செயலக மட்டத்தில் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தின் மூலம் வழங்கப்பட்ட முதலாவது மருத்துவ உதவி நன்மை 2025.09.18 அன்று வழங்கப்பட்டது.
பிரதேச செயலக அதிகாரி (புகைப்படத்தில் வலதுபுறம்) தலைமையில், உதவி பிரதேச செயலர் (புகைப்படத்தில் வலதுபுறம் இரண்டாமவர்) மேற்பார்வையின் கீழ், மற்றும் விடயப் பொறுப்பு அதிகாரி (புகைப்படத்தில் இடதுபுறம் இரண்டாமவர்) தலையீட்டினால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு மருத்துவ உதவி துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் மருத்துவ உதவி மற்றும் ஏனைய நிவாரணச் சேவைகளை இப்போது நீங்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு.Click Here.















